ykannan: அழகுக்கு அழகு சேர்க்க:

Sunday, August 1, 2010

அழகுக்கு அழகு சேர்க்க:

அழகுக்கு அழகு சேர்க்க சரியான உணவுகளை நாம் தேர்ந்து எடுத்து உண்டாலே நாம் எத்துனை வயதிலும் இளமையாக இருக்கலாம். அழகை பராமரிக்க சில யோசனைகள்:


அழகிய கண்களுக்கு:

பெண்களுக்கு அழகே கண்கள் தான்..தினமும் காலை எழுந்தவுடன் சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் கண்களை அலசவும். கண்கள் புத்துணர்ச்சி பெரும். கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ள உனவுகளை சாப்பிடவும். கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பால், பழங்கள்,கீரைகள், பப்பாளி போன்ற உணவுகளை அதிகமாக சேர்க்கவும். பேரீச்சபழம் தினமும் சாப்பிட்டால் கண் தெளிவு பெரும்


நீ சிரித்தால் சிரிப்பழகு:

சிரிக்கும் பொழுது முகத்துக்கு அழகு கூட்டுவது பற்கள் தான்.
பற்களில் எப்பொழுதும் பிளாக்யு என்ற மெல்லிய கிருமிகள் இருக்கும். இதனை தடுக்க தினமும் உணவு சாப்பிட்ட பின்பு வாயினை நன்றாக கொப்பளிக்கவும். இரண்டு முறை பல் துலக்கவும். இரவில் வெந்நீரில் உப்பு போட்டு வாய்கொப்பளிக்கவும். இதன் மூலம் பல்லின் இடுக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். அதிக சூடான உணவுகளோ அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.


நீ நடந்தால் நடை அழகு:

கால்களை சுத்தமான வெந்நீரில் உப்பு, எலுமிச்சை சாறு போட்டு முட்டி வரை நனையும் அளவுக்கு 10 நிமிடம் தண்ணீரில் வைக்கவும். சின்ன பிரெஷ் வைத்து விரல் நகங்களை அலசவும். பின்னர் மென்மையான துணியினை வைத்து துடைத்துவிட்டு கால்களுக்கு போடும் கிரீமை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்


நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு

நீண்ட கூந்தல் யாருக்கு தான் ஆசையில்லை. அதற்கு அடிக்கடி அன்னாசிப்பழம், ஆப்ப்ள், கோதுமை உணவு, கீரைவகைகள், தேன், வெள்ளரிக்காய் கறிவேப்பிலை பொடி ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்க்கவும். தினமும் பெண்கள் தலையினை வாரி பூ வைத்தால் அழகு கூந்தல் இன்னும் அழகாக இருக்கும்.
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு:
சிலருக்கு கை முட்டிகள் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும்।இரவில் ஆலீவ் ஆயில் கைகளுக்கு தேய்து பாடுப்பதாலும் மென்மையாகும்।
நகங்கள் உறுதியாகஇரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வென்நெய் தடவவும்,விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.நகங்களும் உறுதியாகவும் இருக்கும் ।சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி। கோதுமை மாவினால் கைகள் இன்னும் மிருதுவாகும்

அன்புடன்

கண்ணன்

No comments:

Post a Comment