ykannan: September 2010

Saturday, September 25, 2010

தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம்!


ஒருவ‌ர் காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்பதை அவரது காதையு‌ம், செ‌ல்பே‌சியையு‌ம் வை‌த்து‌ச் சொ‌ல்‌லி‌விடலா‌ம்.எ‌ங்க அவ‌ர் காதை‌ப் பா‌ர்‌க்க முடி‌கிறது.எ‌ப்போது‌ம் கா‌தி‌ல்
செ‌ல்பே‌சி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறதே எ‌ன்று சொ‌ன்னா‌ல், அவ‌ர் ‌நி‌ச்சய‌ம் காத‌லி‌ல் ‌விழு‌ந்தவராக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்.

இது டெ‌‌லி மா‌ர்‌க்கெ‌‌ட்டி‌ங் வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு‌ப் பொரு‌ந்தாது..

பெரு‌ம்பாலான காதல‌ர்க‌ள் வெகு நேர‌ம் தொலைபே‌சி‌யி‌ல் அ‌ர‌ட்டை அடி‌ப்பதை வழ‌க்காமாக‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். ‌நி‌ற்கு‌ம் போது, நட‌க்கு‌ம் போது பய‌ணி‌க்கு‌ம் போது என எ‌ப்போது‌ம் ஏதாவது ஒ‌ன்று இவ‌ர்க‌ள் வா‌யிலு‌ம், காத‌லு‌ம் போ‌ய்‌க்கொ‌ண்டே இரு‌க்கு‌ம்.

கூட இ‌ரு‌ப்பவ‌ர்க‌ள்தா‌ன், ம‌ணி‌க்கண‌க்கா அ‌ப்படி எ‌ன்ன‌த்தா‌ன் பேசுவா‌ர்களோ எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். அவ‌ர்களு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு அ‌ப்படி பே‌சிய‌வ‌ர்களாக‌‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்பது வேறு கதை.

ஆனா‌ல் இ‌ப்படி தொலைபே‌சி‌யி‌ல் பேசுவ‌தி‌ல் ‌மிகவு‌ம் கவன‌ம் தேவை எ‌ன்பது எடு‌த்து‌க் கூறவே இ‌ந்த க‌ட்டுரை. அதாவது, இ‌ப்படி செ‌ல்பே‌சி‌யி‌ல் பே‌சி‌க்கொ‌ண்டிரு‌ப்பதா‌ல், ஒருவரது படி‌ப்போ அ‌ல்லது ப‌ணியோ, ம‌ற்றவ‌ர்களுடனான சுமூக உறவோ பா‌தி‌க்க‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல், தொட‌ர்‌ந்து அ‌ப்படி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌க்க முடியாத‌ல்லவா? ஒ‌ன்றை பா‌தி‌க்கு‌ம் ம‌ற்றொ‌ன்றை எ‌ப்படி தொட‌ர்‌வீ‌ர்க‌ள்.

‌விஷய‌த்‌தி‌ற்கு வரு‌வோ‌ம். காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய பு‌தி‌தி‌ல் 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் 23.55 ‌நி‌மிட‌ங்களை செ‌ல்பே‌சி‌யி‌லேயே ‌க‌ழி‌த்த காதல‌ர்க‌ள் ‌சில மாத‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு வெ‌ளி உலக‌ம் ஒ‌ன்று இரு‌ப்பதை அ‌றிவா‌ர்க‌ள்.

‌பிறகு இவ‌ர்களது பே‌ச்சு நேர‌‌ம் குறையு‌ம். ஒரு முறை, ஆசையாக போ‌ன் செ‌ய்யு‌ம்போது, ரொ‌ம்ப மு‌க்‌கியமான வேலை‌யி‌ல் இரு‌க்‌கிறே‌ன். இரவு பேசலா‌ம் எ‌ன்று ம‌ற்றவ‌ரி‌ன் ப‌திலு‌க்கு‌க் கூட காத‌்‌திராம‌ல் போனை க‌ட் செ‌ய்யு‌ம் நிலையு‌ம் ஏ‌ற்படு‌ம்.

உ‌ண்மை‌யிலேயே ஒருவ‌ர் அதுபோ‌ன்ற இ‌க்க‌ட்டான சூ‌ழ்‌நிலை‌யி‌ல் இரு‌ந்தாலு‌ம், இது ஆர‌ம்ப‌த்‌தி‌ல் காதலரு‌க்கு எ‌ரி‌ச்சலை உ‌ண்டா‌க்கு‌ம். காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய பு‌தி‌தி‌ல் அலுவலக‌ம், கோ‌யி‌‌ல் எ‌ன்று எ‌தையு‌ம் பாராம‌ல் செ‌ல்பே‌சி‌யி‌ல் பே‌சியவ‌ர், இ‌ப்போது ந‌ம்மை உதா‌சீன‌ப்படு‌த்துதாக மன‌ம் குமுறு‌ம்.

எனவே இ‌ந்த ‌சி‌க்கலை‌த் ‌தீ‌ர்‌க்க, ஆர‌ம்ப‌த்‌திலேயே, அலுவலக/பயண நேர‌த்‌தி‌ல் போ‌ன் பேசுவதை‌த் த‌வி‌ர்‌ப்பது நல‌ம்.

ஆர‌ம்ப‌த்‌தி‌ல் ‌‌நிறைய‌ப் பே‌சி ‌பி‌ன்ன‌ர் பேசாம‌ல் இரு‌‌க்கு‌ம்போது காத‌ல் புய‌ல் வலுவ‌ற்று‌ப் போனதாகத‌் தெ‌ரியு‌ம். அதனா‌ல் எ‌த்தனை குறைவான நேர‌ம் பேசமுடியுமோ, அ‌வ்வளவு குறைவான நேர‌த்தை ம‌ட்டு‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு அதனை‌‌த் தொட‌ர்‌ந்து கடை‌பிடி‌த்தா‌ல் உ‌ங்க‌ள் காத‌லி‌ல் லேசான பூக‌ம்ப‌ங்க‌ள் ஏ‌ற்படாம‌ல் த‌வி‌ர்‌க்கலா‌ம்.

இ‌ந்த ‌விஷய‌‌த்தை எ‌த்தனையோ காதல‌ர்க‌ள் உண‌ர்வு‌ப்பூ‌ர்வமாக
உண‌ர்‌ந்‌திரு‌ப்பா‌ர்க‌ள்.. அ‌ல்லவா?

அன்புடன்

கண்ணன்

வீட்டு வேலைகளில் கணவர்களும் பங்கேற்பது அவசியம்


அதிகமான குடும்பங்களில் ஆண்கள் தொழிலுக்குச் சென்றுவிட, பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளை பராமரிப்பவர்களாகவும் வீட்டு வேலைகளை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

தொழிலுக்குச் சென்ற ஆண்களைவிட அதிகமாக வேலைப் பளு நிறைந்தவர்களாகதான் இந்த பெண்கள் காணப்படுவார்கள்.

வீட்டை சுத்தம் செய்தல்,பாத்திரங்கள் கழுவுதல், உடைகள் துவைத்தல், முற்றத்தை சுத்தம் செய்தல்,சமைத்தல்,பிள்ளைகளை பராமரித்தல் என வேலைகள் அவர்களுக்கு நீண்டுக்கொண்டே செல்கின்றன.

இந்த வேலைகளில் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்தும் பெண்கள் சிலர், மாலை தனது கணவர்கள் வீடு திரும்பும் போது அவர்களை முறையாக கவனிக்கத் தவறுகின்றனர்.

களைத்துப்போய் வீடு வரும் கணவர்களுக்கு தேநீர் கொடுப்பது, சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்து உரையாடுவது போன்றவை சில குடும்பங்களில் கிடையாது. சில வீடுகளில் கணவர்கள் வீட்டிற்கு திரும்பும்போது பெண்கள் குட்டி நித்திரையில் ஆழ்ந்துவிடவும் செய்கின்றார்கள்.

விரும்பிய உணவை சமைத்துக்கொடுக்க முடியாமல் போவது,உறவில் ஈடுபட விருப்பமின்மை போன்றவை அதிகமான வேலைப்பளுவை அவர்கள் தலையில் திணிப்பதனாலும் ஏற்படுகின்றது.

பெரும்பாலும் இதை ஆண்கள் புரிந்துக்கொள்ள தவறுகின்றனர்.சில நேரங்களில் அவர்களுடன் இந்தச் சிறு சிறு விடயங்களுக்காக சண்டைபிடிக்கவும் செய்கின்றனர்.

ஆண்கள் தங்கள் அன்பு நிறைந்த மனைவியர்களுடன் அழகிய இல்வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமானால் முதலில் அவர்களது வேலைப் பளுவை குறைக்க வேண்டும்.

வீட்டு வேலைகளில் மனைவியுடன் கணவரும் பங்கேற்றுக்கொள்ள வேண்டும்.பெண் செய்ய வேண்டியதை பெண்தான் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கை கணவர்கள் விட்டுவிட வேண்டும்.

கணவர் தங்களால் முடிந்த சிறுசிறு உதவிகளையாவது செய்துக்கொடுத்தால் மனைவி மிக மகிழ்ச்சியடைவார். உதாரணத்திற்கு மனைவியர் காலையில் எழும்பும் போது அவர்களுடன் நீங்களும் எழலாம். எழுந்து வீட்டை சுத்தம் செய்து கொடுக்கலாம். காய்கறிகள் நறுக்கிக்கொடுக்கலாம்.முற்றத்தை சுத்தம் செய்யலாம். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஆயத்தப்படுத்தலாம். அவர்களுக்கு உணவுகளை பொதியிட்டுக்கொடுக்கலாம். குடும்பத்தினரின் ஆடைகளை துவைக்க மனைவிக்கு உதவலாம்.

இவ்வாறு சிறுசிறு விடயங்களை கணவர்கள் செய்து கொடுக்கும் போது மனைவியர்களது வேலைப்பளுவும் குறையும். கணவர்கள் மீதான அன்பும் அதிகரிக்கும்.

அன்பு அதிகரித்தால் கணவர் வெளியே செல்லும் போதும் வாசல்வரை வந்து
வழியனுப்பிவைத்துவிட்டு,கணவர் சென்றுமறையும் வரை அவர்களையே பார்த்து கைக்காட்டிக்கொண்டிருக்கும்,மாலையில் அவர்களின் வரவை எதிர்பார்த்து அன்புடன் வாசலில் காத்திருக்கும் மனைவியைப் பெறலாம்.

வீட்டு வேலைகள் பெண்களுக்கு மாத்திரமானவை எனவும் ஆண்கள் அதில் பங்கேற்பது கௌரவத்திற்கு இழுக்கு எனவும் சில ஆண்கள் கருதுகின்றனர். ஆனால் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொழில்சார் நிபுணர்கள் பலர் தங்கள் வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஒத்துழைப்பவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்களின் குடும்பவாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது.

எல்லா கணவர்களும் இதை முயன்று பார்க்கலாமே

அன்புடன்

கண்ணன்

Friday, September 24, 2010

மனைவிமார்களை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி??


முதலில் நெடுஞ்சான் கிடையாக அவங்க காலில் விழுந்து விடுவது. (என்ன சார் இது எழுந்திரிங்க! சொன்னவுடனே இப்படியா? பொறுங்க நாம தப்பு செஞ்சுட்டோம்னா/அது அவங்களுக்கு தெரிஞ்சிட்டா மட்டும் தான் அப்படி செய்யணும்,சரியா!)

அப்படி விழுந்து விட்டு தலை குனிந்தவாறே அவங்க கிட்டே இருந்து நல்ல பதில் வரும் வரை அப்படியே கிடைக்கணும். தலை தூக்கி பார்க்கக் கூடாது. மிதி விழும் அபாயம் இருக்கிறது! உஷார்!!
இதெல்லாம் ஆரம்ப தற்காப்பு தான்!!

இனி தான் பயிற்சி ஆரம்பம்.

விழி விரித்து ஜூம் லென்ஸ் போட்ட மாதிரி கண்களை வைத்துக் கொண்டு அவங்க நம்மை முறைத்தால் தலை தாழ்ந்து நடக்க பழகிக்கணும். சரியா? ம்ம்ம் நல்லா தலையாட்டுறீங்களே! good அது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. அப்படி பார்க்காமல் வீம்புக்கு நாமும் முறைத்தால், நாம் பெற்ற சின்னஞ் சிறுசுகளுக்கு "மொத்து" விழும் அபாயம் இருக்கிறது.

கல்யாணத்துக்கு முன்பே கிரிக்கெட் பயிற்சி இருத்தல் கூடுதல் தகுதி உடையவராவர். ஏன்னா? ஏன்னு கேளுங்க சார்? ம்ம்ம் அப்படி தான்.

கிச்சனில் இருந்து பறந்து வரும் மதிப்பு மிக்க ஆயுதங்கள் இன்ன பிற வஸ்துக்களை கேட்ச் பிடிக்க, அடி விழாமல் தப்பிக்க...

அவங்க நம் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது ஏதாவது நாம் எசகு பிசகாக பேச, பொளேரென்று அடி விழுந்தால், விம்மாமல் விக்காமல் வாய்க்குள் அடக்கி அதை வெளி வர விடாமல், உறு தெரியாமல் அழிக்க பழகிக் கொள்ள வேண்டும். சரியா? சரின்னா சரி சொல்லணும்.

ஷாப்பிங் மால் சினிமா தியேட்டர் புடவை, நகைக் கடை போன்ற இடங்களுக்கு போகும் போது பர்சை அவங்க கையிலேயே ஒப்படைத்து விடுவது ஷேஃப்டிக்கு ஷே ஃப்டி!! உத்தமம்.

நம்ம அம்மா வீட்டுக்கு மறந்தும் கூட அடிக்கடி அவங்களை அழைத்துக் கொண்டு போய் விடக் கூடாது. அம்மாவை இங்கே வரச் சொல்லிடனும். அப்படியே வந்தாலும், காலையில் வந்தவங்களை இரவு தங்க அனுமதிக்கக் கூடாது. மாலைக்குள் ஒப்பேத்தி அடுப்பிடனும். புரியுதா இது ரொம்ப முக்கியமான பாடம்.

ரொம்பவும் அவங்களுக்கு ஐஸ் வைத்து நைஸ் பண்ணனும்னா, e- மெயில் f-மெயில் g-மெயில் எல்லாத்துக்கும் ஒங்கட பேரத் தான் பாஸ் வேர்டா போட்டு வச்சிருக்கேன்னு சொல்லிடனும். ஆபத்துக்கு பாவமில்ல!

அம்புட்டு தாங்க! இதத் தவிர வேற எந்த வித ஆபத்தான கட்டம் வந்தாலும், மேலே முதல் வரி இருக்கு பாருங்க அத செஞ்சிடனும். அதை by heart டா வச்சுங்க. ஏன்னா இது heart beat விஷயம். இப்படியெல்லாம் நான் சொல்வேன்னு நீங்க எதிர் பார்த்தா Sorry!!!



மேலே சொன்ன விஷயங்களை படிச்சு சிரிச்சதோட சரி ; அதை சுத்தமா உங்க மூளையிலிருந்து delete செய்து விட்டு கீழே உள்ளதை படிக்க வாங்க!

பெண்கள் நம் வாழ்க்கையில் அருமை பெருமை மிக்கவர்கள். பொறுமையானவர்கள். நம்மமோடு வாழப் பிறந்தவர்கள். அதனை மனதில் கொண்டு இதை இங்கே வரி பிறழாமல் மனதில் இருத்திக் கொள்தல் அவசியம்.


கல்யாணமாகாத இளைஞர் பெருமக்களே நான் சொல்வதை சற்று கவனமாய் படியுங்கள்.


உங்களுக்கு வருங்கால மனைவியை நீங்கள் தேடிக் கொண்டாலும் சரி ; அல்லது உங்கள் பெற்றோர்கள் தேடி அமைத்துத் தரும் மனைவியாக இருந்தாலும் சரி ; நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் மிக சரியாய் அவர்கள் மனதில் பதியும் படி, வரதட்சணை எனும் கைக்கூலி வாங்கினால் இந்த இல்லறத்தில் ஈடுபட மாட்டேன் என்று நீங்கள் கட் அண்ட் ரைட்ட்டாக சொல்லி விடுங்கள்.

காலமெல்லாம் உங்களோடு கைக் கோர்த்து வாழப் போவது உங்கள் மனைவியே யன்றி உங்கள் பெற்றோர்களோ அல்லது சொந்த பந்தங்களோ அல்ல. இப்படி செய்தாலே பெறும் பாலான மனைவிகள் அன்பினால் கட்டுண்டவர்களாவார்கள். இது நிச்சயம்.

அப்படியல்ல நாங்கள் வாங்கியே தீருவோம் என்று அடம் பிடிக்கும் பட்சத்தில், அப்படியானால் நான் என் மனைவியை அழைத்துக் கொண்டு தனி குடித்தனம் போய் விடுவேன் என்று கோரிக்கையை முன் வையுங்கள், ஒரு வேளை அப்ப அவர்களின் மன நிலை மாறக் கூடும்.

எப்படி தான் நாம் போராடினாலும் சீர் செனத்தி என்று ஏதாவது கை மாறத் தான் செய்யும். கண்டுக்கொள்ளாதீர்கள். விட்டு விடுங்கள். நான் சொல்கிற ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வையுங்கள்.

உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் கிடைக்கும் பணத்தை கொஞ்சம் கல்யாணத்துக்கு முன்பே யாருக்கும் தெரியாமல் சேமிக்க ஆரம்பித்து விடுங்கள். அதைக் கொண்டு ஐந்து பவுனிலோ (சவரனிலோ) பத்து பவுனிலோ ஏதாவது ஒரு நகை செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிகமாக இருந்தாலும் ஒட்டியாணம் செய்து வைத்துக் கொண்டாலும் சரியே சந்தோஷம். அய்யா அவ்வளவெல்லாம் இல்லை என்று சொல்லும் பட்சத்தில் ஒரு பவுன் 8 கிராம் காயின்சை யாவது வாங்கி,கல்யாணம் முடிந்து முதன் முதலில் (இரவிலோ/பகலிலோ) உங்கள் மனைவியை சந்திக்கும் போது அதை அவர்கள் கையில் கொடுத்து, இது எனது சொந்த சம்பாத்தியம், உனக்காக வாங்கி ரகசியமாய் வைத்திருந்தேன். இது என் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. தெரியவும் வேணாம். உனது குடும்பத்திலிருந்தும் இந்த செய்தி வெளியே போகவும் வேணாம் என்று சொல்லி கொடுத்துப் பாருங்கள். அவர்கள் கைக்குள் நீங்கள் கொடுத்தது, அவர்கள் உங்கள் கைக்குள் வந்த மாதிரி தான். அன்பை வெளிப் படுத்த எவ்வளவோ வழிகளில் இதுவும் ஒன்று!!

இதற்கு மேல் நான் என்ன சொல்லணும் என்று எதிர் பார்க்கிறீர்கள். என் இளைஞர் பெருமக்களே போங்க போய் நிறைய நல்ல வழிகளில் சம்பாதியுங்கள்!!

உங்கள் நல்ல மனதிற்கு அருமையான குணவதியான மனைவி வாய்க்கும். இதை படித்து விட்டு, இதை படித்து தான் இப்படி செய்தேன் என்று வரும் மனைவியிடம் உளறி வைக்காதீர்கள். அங்கே உங்கள் அறிவு வெட்ட வெளிச்சமாகிவிடும்.

அன்புடன்

கண்ணன்

Thursday, September 23, 2010

வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்

வானத்தை முத்தமிடும் துபாயின் புர்ஜ் கட்டிடம் உலகத்தின்
மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதைப்பற்றி தான் இந்த பதிவு.

இந்த கட்டிடம் 160 நிலைகளை கொண்டு 818 மீட்டர் உயரமுள்ளது.
இதன் உயரத்தை சொல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 1 கி.மீ (KM)

இந்த கட்டிடம் கட்டி முடிக்க மொத்தம் 2 பில்லியன் டாலர்
செலவாகியுள்ளது. இதன் பராமரிப்பு தூய்மைபடுத்த ஆஸ்திரேலியாவில் இருந்து 8 மில்லியன் டாலர் செலவில் கிளினிங் சிஸ்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் கடந்த 4 -ம் தேதி முதல் இது பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றிய சில சுவாரஸ்சியமான தகவல்கள்:

* புர்ஜ் என்றால் டவர் இன் அரபு ( Tower in Arab) என்று பொருள்.

* இதன் தட்பவெட்பம் கட்டிடத்தின் கீழே இருப்பதை விட கட்டிடத்தின்
உச்சியில் 10 டிகிரி செண்டிகிரேட் குளிர்ந்து இருக்கும்.

* இந்த கட்டிடம் 500 ஏக்கர்-ல் அமைந்துள்ளது.

* 12 ஆயிரம் வேலையாட்கள் 100 நாடுகளில் இருந்து வந்து கட்டிடம்
கட்டும் பணி செய்துள்ளனர்.

* 22 மில்லியன் மனிதனின் உழைக்கும் நேரம் இந்த வேலை முடிக்க
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

* மார்ச் 2005 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பிராஜெக்ட் முடிய
5 வருடம் எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த புர்ஜ் கட்டிடம் சம்பந்தமான சில காட்சிகள்
The Al-Burj Dubai with estimated height exceeding 1050 meters



Basement of the X-seed 4000 is a large integrated park



City of Dubai with the Burj Dubai standing high at the middle.



burj-dubai-crane

உலகில் உள்ள ஏனைய கட்டிடங்களுடன் ஒப்பிடும் போது இக் கட்டிடம் இவ்வாறு காட்சி அளிக்கிறது



அன்புடன்

கண்ணன்

Wednesday, September 22, 2010

காதலில் உங்கள் குணம் எப்படி?



காதலில் உங்கள் குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.

உ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2+9=11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

லவ் நம்பர் ஒன்று ==>>சின்னம் ==>மான்

பெண்ணுக்குரிய குணம் ==>>
வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்

ஆணுக்குரிய குணம் ==>>
காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி jgகாண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்

லவ் நம்பர் இரண்டு ==>> சின்னம் ==>> பட்டாம்பூச்சி
பெண் ==>>
கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.

ஆண் ==>>
நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.

லவ் நம்பர் மூன்று ==>> சின்னம் ==>>மீன் தின்னி பிராணி}{otter}

பெண் ==>>
ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

ஆண் ==>>
ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்

லவ் நம்பர் நான்கு ==>> சின்னம் ==>> தேனீ

பெண் ==>>
உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.

ஆண் ==>>
நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடையவர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

லவ் நம்பர் ஐந்து ==>> சின்னம் ==>> குருவி

பெண் ==>>
பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர்.
இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.

ஆண் ==>>
பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்! .

லவ் நம்பர் ஆறு ==>> சின்னம் ==>> வாத்து

பெண் ==>>
குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

ஆண் ==>>
காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

லவ்நம்பர் ஏழு ==>> {சின்னம் ==>>ஆந்தை}

பெண் ==>>
உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற்றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.

ஆண் ==>>
சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.

லவ்நம்பர் எட்டு ==>> சின்னம் ==>>எறும்பு

பெண் ==>>
களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

ஆண் ==>>
காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூக‌அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

லவ் நம்பர் ஒன்பது ==>>சின்னம் ==>>கீரிப்பிள்ளை

பெண் ==>>
இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.

ஆண் ==>>
உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உங்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்.

ஆதாரம் _the book of love

அன்புடன்

கண்ணன்

திருமணத்தின் பின் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? என்று பல நண்பர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கான ஆலோசனைகள்!

1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.

2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும்.

3. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)


4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)

6. தன்னைவிட பத்து வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.

8. தினமும் பின்னேரங்களில் பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.


இதனைக் கடைப்பிடித்தால் பெண்கள் மீதான உங்கள் மோகம் குறைவடைந்து உங்கள் மனைவிமீது அதிகம் அன்பு,ஆசை வரும்.



அன்புடன்

கண்ணன்

பெண்கள் தங்கள் பின்னால் ஆண்களை அலைய வைப்பது எப்படி?

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலையே இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி?

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்

கண்ணன்

காதலிக்கு பிடித்தமானவராக இருக்க!

நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவராக இருந்தால் உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள இதோ சில ஆலோசனைகள்.. (கொஞ்சம் ஓவரா தான் இருக்கு ஆனா வேற வழியில்ல.

1. அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்.

2. அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க.

3. எங்காவது வெளியூர் சென்றுவந்தால் எல்லாருக்கும் வாங்குவதுபோல பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அவர்களுக்கென ஸ்பெஷலாக ஏதாவது பரிசு வாங்கிவந்து கொடுங்கள்

4. இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு, நீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும்

5. கேட்ட கேள்விக்கு மட்டுமோ அல்லது வெறும் ok என்று ஒற்றை வார்த்தையிலோ ரிப்ளை செய்தால் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

6. கருத்துவேறுபாடு வந்து பேசாம இருந்தாங்கனா 'மிஸ் யூ' மெசெஜா வரிசையா அனுப்புங்க. அவங்க கோபத்தை குறைக்கும்.

7. போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.. (அத அவங்க செய்யலாம்)

8. அவங்க கேக்கலனாலும் அப்பப்போ அவங்க போனுக்கு டாப்அப் பண்ணி விடுங்க.

9. சண்டை வந்ததுனா ஆண்கள் தான் இறங்கி வந்து தங்கள சமாதானப்படுத்தணும்னு பொண்ணுங்க நெனப்பாங்க..

10. ஏதாவது ஒரு டாபிக் அவர்களுக்கு பிடிக்கலனா அதுபற்றி பேசாதீங்க.

11. நீங்க சாப்பிட்றீங்களோ இல்லையோ, எவ்ளோ வேலை இருந்தாலும் 3 வேளையும் கரெக்ட்டா போன் (இல்லனா மெசெஜ்) பண்ணி சாப்டியா?னு அவங்கள கேளுங்க.

12. பொதுவா பெண்கள் கோபத்தையோ பிடிக்காததையோ வெளிப்படையா சொல்லமாட்டாங்க. ஆண்கள் தானாக புரிந்துகொள்ளனும்னு நெனப்பாங்க. அதுனால எதுனாலும் அவங்கள கலந்துகிட்டு முடிவெடுங்க.

13. அவங்க எங்கயாவது வெளில போனாங்கனா அவங்களுக்கு முன்னாடி அங்க போய் நில்லுங்க.. உன்ன பாக்கணும்போல இருந்தது, அதான் வந்தேனு சொல்லுங்க.

14. அடிக்கடி SMS பண்ணுங்க. குறிப்பா காலையில் எழுந்தவுடனேயும் தூங்கும் முன்னும் மறக்காம அனுப்புங்க.. (அதாவது உங்கள் நாளின் ஆரம்பமும் முடிவும் அவர்களுடன் தான் என்பதை உணர்த்துங்கள்)

15. எந்த சூழ்நிலையா இருந்தாலும் பாக்கவே முடியலைனாலும் தினமும் தூங்குறதுக்கு முன்னாடி ஒரு மணிநேரமாவது அவங்க கிட்ட மனசு விட்டுப் பேசுங்க.

16. அவங்களோட பிறந்தநாள், முதல் சந்திப்பு இப்படி முக்யமான நாளையெல்லாம் ஞாபகம் வச்சு சர்ப்ரைஸா கிப்ட் கொடுத்து அசத்துங்க. (அவங்களுக்கு ஞாபகத்துல இருந்தாலும் உங்களுக்கு நினைவிருக்கானு டெஸ்ட் பண்ணுவாங்க.. அதுனால ஜாக்கிரதை)

17. ரொமான்ஸா பேசுறோம்னு கண்டபடி எதையாவது உளறி, வளிஞ்சு சொதப்பிடாதீங்க.. டீசன்ட்டா அப்ரோச் பண்ணுங்க.

18. ஏற்கனவே தெரிந்த விசயமானாலும் 'அதுதான் எனக்குத் தெரியுமே'னு அசட்டை செய்யாதீர்கள். ஆர்வமாய் அவர்கள் பேச்சை கேளுங்க.

19. அவர்களது தோழிகளிடம் பேசும்போது அளவோடு பேசுங்கள். இதுவே பெரும்பாலான சண்டைக்கு வழிவகுக்கும். கவனம் தேவை..

20. இன்டர்நெட்டிலோ மொபைலிலோ சாட் பண்ணும்போது வேறு புதிய பெண் அறிமுகமானால் கவனமாகப் பேசுங்கள். அது உங்கள் காதலியாகவே கூட இருக்கலாம்.
உங்களை சோதிக்கும் முயற்சியாக இருக்கும்.

21. அவர்களுக்கு ஏதாவது தனித் திறமையிருந்தால் (உங்களுக்குப் பிடிக்கலனாலும்) அதனைப் பாராட்டுங்கள்.

22. அவர்களிடம் பேசும்போது அதிகாரமோ அட்வைஸோ செய்து அறுக்காமல் கொஞ்சலும் கெஞ்சலுமாகப் பேசுங்கள்.

23. அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்

24. உனக்காக நானிருக்கிறேன் என்றும், நீயில்லாமல் என்னால் இருக்க முடியாது என்றும் அவர்களது உள்ளங்கை பிடித்து அடிக்கடி நம்பிக்கையுடன் சொல்லுங்கள்.

இதெல்லாம் செய்தாலும் அவங்க உங்கள புரிஞ்சுக்கலனா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது, கடவுள் தான் உங்கள காப்பாத்தனும்.

அன்புடன்

கண்ணன்

Tuesday, September 21, 2010

பெண்களைக் கவர சில டிப்ஸ்

”நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ”

இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்)

பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ”பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில” ”அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான்” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல)

இதோ உங்களுக்காக சில டிப்ஸ் !

1. ஆக்டிவா இருக்கணும்

மந்துனு எதையோ பறிகொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது)

2. ஸ்மைலிங் ஃபேஸ்

என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சிரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.)

3. ஓவர் ஆக்‌ஷன் உடம்புக்கு ஆகாது

ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந்தா பண்ணிகிட்டு இருக்க கூடாது. முக்கியமா தற்பெருமை ரொம்ப பேச கூடாது. நான், என் ஃப்ரண்ஸ், எங்க அம்மா அப்டி இப்டினு சுயபுராணம் பாட்றவன கண்டாலே பொண்ணுங்களுக்கு சுத்தமா பிடிக்காது. அவங்களா கேட்டா மட்டும் சொல்லுங்க போதும். அதே மாதிரி தேவையில்லாம சத்தமா பேசி அனாவசியமா சிரிக்கிறது, வளியிறதெல்லாம் கூடாது. (அதுக்காக சிரிப்பை அடக்குறேன் பேர்வழினு சொதப்பிடாதீங்க..)

4. உடைகள்

பொதுவா (ஆண்கள்) சாதாரணமா டிரஸ் பண்ணினாதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும். எங்கிட்டயும் உடை இருக்குனு காட்றதுக்காக உங்க உடம்புக்கும் உடைக்கும் சம்பந்தமில்லாம உடுத்த வேணாம். கேஷ்வலா டிரஸ் பண்ணுங்க. (ஆனா பொண்ணுங்க மட்டும் அலங்காரமா டிரஸ் பண்ணுவாங்க, நீங்க கேக்க கூடாது)

5. கண்கள்


ஒரு பொண்ணுகிட்ட பேசும்போது உங்க கண்கள் ரொம்பவே முக்கியம். உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்பதை வைத்துதான் உங்கள் கேரக்டரை அனுமானிப்பார்கள் பெண்கள். நேருக்கு நேராக முகம் பார்த்துப் பேசுவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். (இனியாவது பேசும்போது வேறு எங்கோ பார்ப்பது, தரையை நகத்தை செல்போனைப் பார்ப்பது எல்லாம் வேண்டாமே)

6. ஹேர் ஸ்டைல்

கண்டபடி ஹேர்கட் கலரிங் எல்லாம் பண்ணினால் நண்பர்கள் வேண்டுமானால் பாராட்டலாம்.. பெண்களுக்கு எரிச்சல் தான் வரும். சீரான ஹேர்கட், கண்ணை உறுத்தாத கலரிங் (அல்லது முடிந்தவரை கலரிங் பண்ணாமல்) இருந்தால் தான் அவர்களுக்கு பிடிக்கும். (ஒழுங்கா தலைக்கு எண்ணெய் தேய்டா பண்ணாட“னு அவங்க கத்துறது கேக்குதா?)

7. உடலமைப்பு

என்னதான் நீங்கள் குள்ளமாகவோ உயரமாகவோ இருந்தாலும் உடலை எவ்வாறு கட்டமைப்பாக வைத்துள்ளீர்கள் என்பதில் கவனம் தேவை. தொள தொள சதையும் தொப்பையுமாக இருக்கும்பட்சத்தில் ”அண்ணா” என்று ஒற்றை வரியில் அனைத்தையமே முடித்துவிடுவார்கள் பெண்கள்.. எப்போதும் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முயலுங்கள். (அதுக்காக ஓவரா கை மசில்ஸை காட்டியபடி சட்டை போட்டுகிட்டே திரியாதீங்க)

சிகெரெட் சீக்ரெட்

சிகெரெட் பிடிக்கிற ஆண்களை பார்த்தால் ஸ்டைலாக இருப்பதாக ஒரு வதந்தி இருக்கும். பிடித்த ஆண்களை கூட வெறுக்க வைத்து விடும் இந்த சிகரெட்.. எனவே தூக்கிப் போடுங்கள் அந்த கண்றாவியை.(அவங்க போனதுக்கப்புறம் எடுத்துக்குவீங்க தானே.. )

இது எல்லாத்துக்கும் மேல எப்பவுமே நீங்க நீங்களா இருந்தாலே போதும்.. அடுத்தவங்களுக்காக செயற்கையா நடந்துக்காம இயல்பா இருந்தாலே பெண்களுக்குப் பிடிக்கும்.

அன்புடன்

கண்ணன்

விண்டோஸ் 7


விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.

1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்:

கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.

ஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட் (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூடுதல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.

பிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில் “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால்,Start மெனு சென்று My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில்Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும்.

இதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.

2.கிளிப் போர்டைக் காலி செய்திட:

பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்; அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில், நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது.

பின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.

முதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New, பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் டைப் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.

3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க:

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI dots per inch) அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று, கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.

இந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட, ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து, அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.

4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்:

நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்கப்படுகிறது. பின்னர், நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.

முதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக, நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில்http:// அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக kannan3h.blogspot.com என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன், விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது. பின்னர் அவற்றைக் காணலாம்.


அன்புடன்

கண்ணன்

திகிலூட்டும் எரிமலை

உலகத்துல மொத்தம் (குறைந்த பட்சம்),1500 எரிமலைகள் தொடர்ந்து (பல வருடங்களாக) தீக்குழம்பைக் கக்கிக்கிட்டே இருக்குதாம். மாக்மா(நக்மா இல்லீங்க!) அப்படீங்கிற பாறைக் குழம்புகள் பூமியின் மிருதுவான பகுதிகளை உடைத்துக் கொண்டு வெடிக்கும்போது பாறைகளின் தீக்குழம்புகளை எட்டுத்திக்கும் வாரி இறைக்கும்.இந் நிகழ்வையே நாம் எரிமலை என்கிறோம்!

உண்மையில் இந்தப் பாறைக் குழம்புகள் வருடக்கணக்கில் (இருட்டில் பதுங்கியிருக்கும் திருடன் மாதிரி) பூமிக்கு அடியில நூற்றுக்கணக்கான வருடங்கள்கூட பதுங்கி இருக்குமாம். எதிர்பாராதவிதமாக திடீரென்று ஒரு நாள் வெடித்துச் சிதறுமாம். எரிமலைகள் பற்றி இதுவரை நாம் அறிந்திராத பல உண்மைகளை தெரிஞ்சுக்கலாம் வாங்க….

எரிமலையைப் பற்றிய திகிலூட்டும் பல உண்மைகள்!

1. உலகிலேயே எரிமலைப் பாறை பியூமீஸ் என்னும் பாறை மட்டுமே தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. வெளிர் வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த பாறைகள் எரிமலையின்போது வெடித்துச் சிதறி பின்பு குளிரும் பாறைகளிலிருந்து பல வாயுக்கள் வெளியாவதால் ஏற்படும் ஓட்டைகளைக் கொண்டது!

2. உலகிலேயே மிக பயங்கரமான எரிமலைகள் சூப்பர் எரிமலைகள் எனப்படுகின்றன! இவை வெடித்துச் சிதறும்போது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தீமழை பொழிவதோடு உலகளாவிய பருவநிலை (தட்ப வெட்ப) மாற்றங்களையும் உருவாக்கும் தன்மை கொண்டவையாம். இவ்வெரிமலைகள் சில லட்ச வருடங்களுக்கு ஒரு முறைதான் வெடிக்குமாம். இத்தகைய ஒரு எரிமலை அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் இருக்கிறதாம். இது வெடிப்பதற்க்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஐய்யய்யோ…..!!

3. உலகின் மிகப்பெரிய எரிமலை இந்தோனேஷியாவின் சும்பாவா (Sumbava) தீவில் உள்ள டாம்போரா(Tambora) மலையில்தான் வெடித்ததாம். 1815 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறிய இந்த எரிமலைக்கு ஒரு லட்சம் மக்கள் பலியானார்களாம்! உலகின் மிகப் பெரிய எரிமலைகள் இந்தோனேஷியாவில் சுமார் 76 இருக்கின்றன என்கிறது அமெரிக்காவின் ஒருஆய்வு!

4. பெரும்பாலான எரிமலைகள் பூமியின் மேற்புறத்தின் விளிம்புகளில் தான் ஏற்படுகின்றனவாம்.ஆனால் சூப்பர் எரிமலைகள் பூமியின் ஆழ்பகுதிகளில் தீக்குழம்புகளுடன் மறைந்திருக்கின்றனவாம்.

5. உலகின் தீ-பனிக்கட்டி நாடு என்றழைக்கப்படும் ஐஸ்லாந்து நாடு, எரிமலைகளின் மேலேதான் உட்கார்ந்து இருக்கிறதாம்.2010 ஏப்ரலில் ஏற்பட்ட Eyjafjallajokull volcano என்னும் எரிமலை,1783 ஆம் ஆண்டின் ஸ்கப்டார் (Skaptar) மலையில் ஏற்பட்டு ஐஸ்லாந்து நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு மக்களையும் விளைநிலம் மற்றும் மீன்பிடி குளங்களையும், காவு வாங்கிய எரிமைலையைவிட அளவில் சற்றே சிறியதாம்!

6. கடந்த 1991 ஆம் ஆண்டு பிலிப்பின்ஸ் நாட்டின் பினாடூபோ (Pinatubo) மலையில் வெடித்துச் சிதறிய எரிமலை 22 மில்லியன் டன் சல்ஃபர் டை ஆக்சைடு என்னும் வேதிப்பொருளை (அமிலம்) கக்கியதோடு உலகின் வெப்ப நிலைவயில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவிற்க்கு குறைத்துவிட்டதாம்! அடேங்கப்பா….!!

7. எரிமலைகள் வளரும் தன்மையுடையனவாம்! லாவா குழம்பும் சாம்பலும் சேர சேர எரிமலைகளுக்கு அவை பல்வேறு படிமங்களையும் உயரத்தையும் ஏற்படுத்திவிடுமாம். இப்படித்தான் பல மலைகளும் உருவாகின்றன என்கிறது அறிவியல் ஆய்வு!

8. எரிமலைகள் முற்றிலும் அழிந்தும் போகக்கூடிய தன்மை உடையவையாம்!

9. எரிமலைகளின் சக்தியானது, மாக்மா (Magma) குழம்புகளை ஒரு மிகப்பெரிய கிண்ணம் போன்ற வடிவத்தில் உருவாக்கிவிடும் தன்மை கொண்டவையாம். இவற்றை கால்டெரா (Caldera) என்கிறார்கள் ஆங்கிலத்தில்!

10. உலகின் மிகப்பெரிய எரிமலையானது ஹவாயின் “மாய்னா லோவா (Mauna Loa)” தானாம். ஹாவாயின் 5 எரிமலைகளுக்குள் ஒன்றான இது கடல் அளவிலிருந்து 13,000 அடி உயரத்தில் இருக்கிறதாம். ஹவாய் தீவுகளே இத்தகைய எரிமலைகளால் உருவானவைதானாம்!

11. எரிமலைகள், சூரியன் மறைவை மிக வண்ணமயமாக்கிவிடுமாம்! கடந்த 2008 ஆம் ஆண்டு அலாஸ்காவின் காசாடோச்சி (Kasatochi) எரிமலை வெடித்துச் சிதறியபோது உலக மக்கள் அனைவரும் வித்தியாசமான அசாதாரணமான அழகுடன் ஆரஞ்சு வண்ண சூரியன் மறைவை காண முடிந்ததாம். இம்மாதிரியான நிகழ்வு, எரிமலையின் சாம்பல்கள் சூரியக் கதிர்களுடன் இணையும்போது ஏற்படுபவையாம்!

இதுவரைக்கும் எரிமலைகள் பத்தி படித்தீர்கள் அதனால உங்கள்ல சில பேருக்கு “இதுல என்ன பெரிய திகிலு, இது எல்லாம் ஒரு சப்ப மேட்டரு” அப்படீன்னுகூட தோணலாம். உண்மையாவே திகிலடையனும்னா வாங்க, வெடிக்கும் எரிமலைகளோட போட்டோஸ் பார்ப்போம்……
















அன்புடன்

கண்ணன்