ykannan: பெண்களே உஷார் III

Friday, June 18, 2010

பெண்களே உஷார் III

பெண்களுக்கு எவ்வாறெல்லாம் தொல்லை கொடுக்கலாம் என்று நம்ம ஆட்கள்கிட்டதாங்க கத்துக்கணும் . உங்களுக்கு தெரியாமயே உங்கள் போட்டோ இணையதளங்களில் வலம் வரலாம். பல்வேறு கீழ்தரமான தளங்களில் இடம்பெறலாம். எப்படின்னு கேக்கறீங்களா? தொடர்ந்து படிங்க ..



இன்னிக்கு பெண்களுக்கு எதிரான முக்கிய ஆயுதமே கேமரா செல்போன்தான். இன்னிக்கு நெறைய பேர் இந்தமாதிரி போன்தான் உபயோகிக்கறாங்க. அதில சில பேர்தாங்க இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யறாங்க. இன்னிக்கு நாகரீகம்னு சொல்லிக்கிட்டு மேல்நாட்டு உடைகளை போடறீங்க.(குறிப்பா கல்லூரி மாணவிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோர்) கேட்டா வசதியா இருக்கு இந்த கோடைகாலத்தில அப்படின்னு. ஆனா பாருங்க உங்களுக்கு வசதியா இருக்கற விசயமே உங்களுக்கு ஆபத்தாக முடியும். உடலை மறைக்கற மாதிரி உடை என்றால் பிரச்சனை இல்லை. பல உடைகள் அப்படியா இருக்கு?

இந்த மாதிரி உடை அணிந்து நீங்கள் பொது இடங்களுக்கு செல்லும்பொழுது உங்களுக்கே தெரியாமல் சில விஷமிகளின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு நீங்கள் பலி ஆகிறீர்கள். நீங்கள் படிக்கும் கல்லூரியோ அல்லது பொருட்கள் வாங்க செல்லும் ஸ்பென்சர், சிட்டி சென்ட்டர் அல்லது கடற்கரை போன்ற இடத்திலையோ நீங்கள் புகைப்படம் எடுக்கப்படலாம். பின்பு அது பலரிடம் கைமாறும் இணையதளத்திலும் போடப்படலாம். .

நீங்கள் கல்யாணமாகாத இளம்பெண்ணாக இருந்து உங்கள் படம் இவ்வாறு தளங்களில் வந்தால் உங்கள் வாழ்க்கை ? . அதேபோல்தான் திருமணம் ஆனவர்களுக்கும். தேவையற்ற பல சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும்.வெளில போறப்ப நாம எப்படி உடை அணிகிறோம் என்பது முக்கியம். பார்ப்பதற்கு நன்றாக இருந்தால் மட்டும் போதாது , உடலை மறைப்பதாகவும் இருக்கணும் எனவே முடிந்த வரை வெளியில் செல்லும்பொழுது நமது உடையில் கவனம் செலுத்துவோம்.

அன்புடன்

கண்ணன்

1 comment: